×

கமுதி பேரூராட்சியில் புதுப்பொலிவு பெறும் சிறுவர் பூங்கா

கமுதி, மே 6: கமுதியில் சிறுவர் பூங்கா சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவு பெற்று வருகிறது. கமுதி பேருந்து நிலையம் அருகே செட்டியூரணி கரையில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா சீரமைப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் பூட்டியே கிடந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த சிறுவர் பூங்கா சீரமைக்கப்பட்டு, சுவர் முழுவதும் வண்ணங்கள் மற்றும் கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டு புதுப் பொலிவுடன் சிறுவர், சிறுமியர்கள் இந்த விடுமுறை நாள்களில் விளையாடுவதற்கு ஏற்ற ஊஞ்சல், சறுக்கு மற்றும் பல்வேறு பொழுது போக்கு சாதனங்களுடன் சில நாள்களில் துவங்க உள்ளது. புதுப்பொலிவு பெற்று வரும் இந்த பூங்காவை பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி மற்றும் துணை தலைவர் அந்தோணி சவேரியார் அடிமை, செயல் அலுவலர் இளவரசி மற்றும் கவுன்சிலர்கள் பொன்னுச்சாமி, போஸ் செல்வா ஆகியோர் பார்வையிட்டனர்.

The post கமுதி பேரூராட்சியில் புதுப்பொலிவு பெறும் சிறுவர் பூங்கா appeared first on Dinakaran.

Tags : Kamudi Municipality ,Kamudi ,Chettiurani ,Park ,
× RELATED சுதந்திர போராட்ட தியாகி மரணம்